தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமூகவலைதளங்களில் சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த ராம் கோபால் வர்மா, என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கிறேன் என "லட்சுமியின் என்டிஆர்" பட அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த படத்தை தொடங்குவதற்கு முன்னதாக இப்போது நாகார்ஜூனா நடிக்கும் புதிய படத்தை தொடங்கியுள்ளார். ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜூனா போலீசாக நடிக்கிறார். படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நாகார்ஜூனாவுடன் தபு, அனுஷ்கா போன்ற முன்னணி நடிகைகள் நடிப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த செய்தியை ராம் கோபால் வர்மா மறுத்துள்ளார். நாகார்ஜூனாவுடன் அனுஷ்கா, தபு நடிப்பதாக வெளியான செய்திகள் வதந்தி என்று மறுப்பு செய்தி வெளியிட்டிருக்கிறார். அதோடு, இந்த படத்தில் நாயகி வேடத்தில் மைரா ஷரீன் என்பவர் நடிக்கயிருப்பதாக சொல்லி அவரது போட்டோவை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.