தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் ஆண்டனி, டயானா சம்பிகா நடித்த அண்ணாத்துரை படம் நேற்று வெளியானது. தமிழ்நாடு முழுவதும் 400 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. படம் வெளியானதையொட்டி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி, "அண்ணாத்துரை என்ற தலைப்புக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி. அந்த பெயருக்கு களங்கம் ஏற்படாதபடி தான் படத்தையும் எடுத்துள்ளோம்" என்றார் அவர் மேலும் கூறியதாவது:
ராதிகா, தயாரிப்பாளராகவும், நான் நடிகராகவும் ஒரு படத்தில் இணைவோம் என நான் எதிர்பார்க்கவேயில்லை. டயானா சம்பிகா தமிழ் பொண்ணு தான், நல்ல நடிகை, அவரே படத்தில் டப்பிங்கும் பேசியிருக்கிறார். அலெக்சாண்டர் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். என் கதாபாத்திரங்களில் எனக்கு என்ன வருமோ அதை நான் பிரதிபலிக்கிறேன். எனக்கு வராத விஷயங்களை நான் முயற்சி செய்வதில்லை.
நல்ல சினிமாவுக்கு பாடல்கள் அவசியமே இல்லை. முன்பை போல பாடல்களுக்கு இப்போது வருவாய் வருவதில்லை. அதனால் எங்கள் வெப்சைட்டில் இலவசமாக வழங்கியிருக்கிறோம். படத்தில் எனக்கு டபுள் ரோல். அண்ணன் கதாபாத்திரத்துக்கு அண்ணாதுரை, தம்பிக்கு தம்பிதுரை என்றும் வைத்தோம், படத்துக்கு தலைப்பு குலசாமி எனவும் வைக்க முடிவு செய்தோம். பின் பிச்சைக்காரன் படத்தில் வரும் அருள் போலவே ரொம்ப சிறந்த கதாபாத்திரம் என்பதாலும், அண்ணாதுரை என்ற தலைப்பை அவமதிப்பு செய்யாததாலும் இந்த தலைப்பையே வைத்தோம். எந்த அரசியல் கட்சியும் இந்த தலைப்புக்கு இதுவரை ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றார் விஜய் ஆண்டனி.