பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் பிரபலமான நடிகை கஜோல். திருமணம், குழந்தைகள் போன்றவற்றால் சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர், சமீபத்தில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். தொடர்ந்து பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
சமீபத்தில் குழந்தைகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் கஜோல். அப்போது அவரிடத்தில் உங்கள் குழந்தைகளில் நீங்கள் கற்று கொண்ட விஷயம் என்னவென்று கேட்டபோது, அவர் கூறியதாவது...
நான் கர்ப்பமாக இருந்தபோதே என் குழந்தைகளிடம் கற்க தொடங்கிவிட்டேன். அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுள்ளேன். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய ஆசிரியர்களே அவர்கள் தான். ஒவ்வொரு நாளும் அவர்களிடம் புதுபுது விஷயங்களை கற்று வருகிறேன். சில விஷயங்கள் எனக்கு புரியவில்லை என்றால் கூட, அவர்கள் அதற்கான அர்த்தத்தை சொல்லி எனக்கு புரிய வைப்பார்கள் என்றார்.