இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாள சினிமாவை பொறுத்தவரை 1992ல் மோகன்லால் நடிப்பில் வெளியான 'யோதா' என்ற ஒரே ஒரு மலையாளப் படத்திற்கு மட்டும்தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். அப்போது தான் தமிழில் ரோஜா படத்தில் அவர் அறிமுகமாகி இருந்தார் என்பதால் மலையாளத்தில் வாய்ப்பு வரவே அதை உடனே ஏற்றுக்கொண்டார். ஆனால் அதன்பின் இந்த 25 வருடங்களில் மற்றொரு மலையாள படத்துக்கு அவர் இதுவரை இசையமைக்கவே இல்லை.
இப்போது மீண்டும் மலையாள படம் ஒன்றுக்கு இசையமைக்க இருக்கிறார். ஆம். இயக்குனர் பிளஸ்சி டைரக்சனில் பிருத்விராஜ் நடிக்க இருக்கும் 'ஆடுஜீவிதம்' படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதற்கு முன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான 'ராவணன்', 'காவியத்தலைவன்' ஆகிய படங்களில் பிருத்விராஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.