தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் இப்படி கூட ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என திறமையான பல இயக்குனர்கள் ஆச்சரியப்பட்டும், அதிர்ச்சியடைந்தும் இருக்கிறார்கள். இன்று வந்த அறிவிப்பு அதற்குக் காரணம். தமிழ்த் திரையுலகின் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஸ்டுடியோ க்ரீன். இந்த நிறுவனம் இதுவரை சூர்யா, கார்த்தி ஆகியோரை வைத்துத்தான் அதிக படங்களைத் தயாரித்தது. தற்போது மற்ற ஹீரோக்களின் படங்களையும் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்து வெளிவந்த 'ஹரஹர மகாதேவகி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ் பி. ஜெயக்குமார். அடுத்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தையும் சந்தோஷ் இயக்க ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் உடனடியாக ஆரம்பித்தது. இப்போது மூன்றாவது முறையாக சந்தோஷ் இயக்க ஆர்யா நடிக்கும் புதிய படத்தையும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமே தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கான பூஜை இன்று எளிமையாக நடைபெற்றது. ஆக, ஒரே நிறுவனத்தின் அடுத்தடுத்த மூன்று பட வாய்ப்புகளையும் சந்தோஷ் பெற்றுள்ளது திரையுலகத்தில் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு என்றாலே வந்து வாழ்த்தும் சூர்யா குடும்பத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.