புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
2017ம் ஆண்டின் முதல் நேரடித் தமிழ்ப் படத்தின் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படும் ஒரே படம் 'மெர்சல்'. படம் வெளியான பின் ஏற்பட்ட ஜிஎஸ்டி சர்ச்சையால் படத்திற்கு பல கோடிகளைச் செலவு செய்தும் கிடைக்காத இலவச விளம்பரம் கிடைத்து. அதனால், படத்தைப் பார்க்கத் தவிர்த்த பலரும் தேடிச் சென்று படத்தைப் பார்த்தனர். முந்தைய விஜய் படங்களின் வசூலை எல்லாம் முறியடித்து படம் வெற்றி பெற்றதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இதுவரை எந்த விதமான வசூல் நிலவரமும் அறிவிக்கப்படாத நிலையில் படத்தின் வசூல் 250 கோடியைத் தாண்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவித்தன. தெலுங்கில் மூன்று வாரங்கள் கழித்து 'அதிரிந்தி' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியானது. பெரிய வெற்றியை தெலுங்கில் பெறவில்லை என்றாலும் படத்தை வாங்கிய விலையை விட லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்தாகச் சொல்கிறார்கள்.
அக்டோபர் 18ம் தேதி தீபாவளியன்று வெளியான 'மெர்சல்' படம் 40 நாட்களைக் கடந்தும் இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் இனி வரப் போகும் படங்களும் 'மெர்சல்' வெற்றியைத் தாண்டப் போவதில்லை என்றே வியாபார வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. '2.0' படம் வெளிவரும் வரை 'மெர்சல்' சாதனை அப்படியே இருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். அதை, '2.0' முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.