மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா என இந்தியத் திரையுலகின் முக்கிய நடிகர்கள் நடிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சரித்திரப் படம் 'சை ரா நரசிம்ம ரெட்டி'. படத்தின் முதல் பார்வை மோஷன் போஸ்டர்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் அப்போதே அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், தற்போது இந்தப் படத்திலிருந்து விலகி விட்டதாக சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியிருக்கிறார். 'சை ரா' படத்திற்கு முன்பே பணிபுரிவதாக சம்மதித்த படங்களின் பணிகள் அதிகமாக இருப்பதால் இப்படத்திலிருந்து விலகுவதாகவும், விலகுவதும் வருத்தமளிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
'சை ரா ' படத்தின் ஒளிப்பதிவாளராக அறிவிக்கப்பட்ட ரவிவர்மன் அப்படத்திலிருந்து சில வாரங்களிலேயே வெளியானார். அவருக்குப் பதிலாக ரத்தினவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் வெளியேறிவிட்டதால் அவருக்குப் பதிலாக யாரை ஒப்பந்தம் செய்ய உள்ளார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.
ஏ.ஆர்.ரஹ்மான் அப்படத்திலிருந்ததால் சர்வதேச அளவில் படத்திற்கு ஒரு பார்வை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. திட்டமிட்டபடி படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெறாததே இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் வெளியேறியதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.
பிரம்மாண்ட சரித்திரப்படமாக 150 கோடி ரூபாய் செலவில் உருவாக உள்ள 'சை ரா' படத்தின் இந்த ஆரம்ப சிக்கல்கள் சிரஞ்சீவியின் ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ளன.