'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இன்றைய தேதியில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தாலும் கூட, அதையும் தாண்டி இமேஜ் பார்க்காமல் நடிப்புக்கு சவால் விடும் எந்தவித கேரக்டரிலும் நடிக்க தயாராக இருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. அப்பட்டிப்பட்டவருக்கு, மலையாளத்தில் மோகன்லாலுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாம்.
மோகன்லாலா, மம்முட்டியா..? உங்களை கவர்ந்தது யார் என்கிற கேள்விக்கு, மோகன்லால் தான் என பதில் கூறியுள்ள விஜய்சேதுபதி. 'தன்மாத்ரா' என்கிற படத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்டநாள் ஆசை என கூறியுள்ளார். அந்தப்படத்தில் அல்சீமர் என்கிற ஞாபக மறதி குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்ட மத்திய வயது நபராக, இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக அற்புதமாக நடித்திருந்தார் மோகன்லால்.