தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விக்ரம், த்ரிஷா நடித்த சாமி படம் பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் மூலம் தான் த்ரிஷா கமர்ஷியல் ஹீரோயின் ஆனார். ஹரி இயக்கி இருந்தார். தற்போது சாமியின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் விக்ரம், த்ரிஷாவை காதலித்து திருமணம் செய்து கொள்வார். அதனால் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்திலும் த்ரிஷா நடிப்பதாக இருந்தது. இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டு அட்வான்சும் வாங்கினார். படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் படத்திலிருந்து திடீரென விலகிக் கொண்டார் த்ரிஷா. படத்தில் ஹீரோயின் கீர்த்தி சுரேசுக்கு அதிக முக்கியத்தும் இருப்பதாலும், தனக்கு ஒரு சில காட்சிகளே இருப்பதாலும் த்ரிஷா விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக படத்தின் தயாரிப்பளார் சிபு தமீம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாருக்கு தயாரிப்பாளர் சங்கம் த்ரிஷாவிடம் விளக்கம் கேட்டிருந்தது. தனது விளக்கத்தை த்ரிஷா தயாரிப்பாளர் சங்கத்தில் எழுத்துபூர்வமாக கொடுத்துள்ளார்.
அதில் அவர் "படத்தில் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை. அதனால் படத்திலிருந்து விலகிக் கொள்ள எனக்கு உரிமை இருக்கிறது. வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பித் தந்து விடுகிறேன். எனது சொந்த காரணங்களுக்காக படத்திலிருந்து விலகி இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். என்றாலும் த்ரிஷாவை சமாதானப்படுத்தி நடிக்க வைக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது.