'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கார்த்தி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படம் சமீபத்தில் வெளிவந்தது. சதுரங்க வேட்டை இயக்குனர் எச்.வினோத் இயக்கி இருந்தார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.
இந்தப் படம் தமிழ்நாட்டை கலக்கிய வடநாட்டு கொள்ளையர்களை பிடித்த தமிழ்நாட்டு போலீசின் கதை. படத்தில் குறிப்பிட்ட ஒரு வடநாட்டு சமுதாயத்தினர் கொலை கொள்ளையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மற்றும் குற்றப்பரம்பரை பற்றிய தகவல் மற்றும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. பூர்வகுடி மக்கள் தங்கள் விடுதலைக்காக பேராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களை கொள்ளையர்களாக சித்தரிக்கலாமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் மற்றவர்களின் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுள்ள தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் பிரபுவும் சில காட்சிகளை நீக்கவும் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தை வைத்து மட்டுமே இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் தவறாக சித்தரிக்கவில்லை. எந்த ஒரு சமுதாயமும் கொலை கொள்ளையை குலத் தொழிலாக கொண்டு வாழவில்லை. அப்படி ஒரு சித்தரிப்பாக படத்தில் காட்டவில்லை. இருப்பினும் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இனிவரும் தொலைக்காட்சி ஒளிபரப்பு, மற்றும் இணையதள ஒளிபரப்பு ஆகியவற்றிலிருந்து குற்றப்பரம்பரை என்ற சொல் மற்றும் அது தொடர்பான காட்சிகள் நீக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.