‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகர் நிவின்பாலி தற்போது மலையாளத்தில் காயம்குளம் கொச்சுன்னி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்த படக்குழுவினருக்கு ஆச்சர்யம் அளிக்கும் விதமாக சமீபத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் இருவரையும் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன், ரோஷன் ஆண்ட்ரூஸ், நிவின்பாலி ஆகியோர் வரவேற்றனர்.
இவர்களை வரவேற்கும் விதமாக பலூன், தோரணங்கள் என படப்பிடிப்பு தளமே அமர்க்களப்பட்டது. மேலும் அங்கே ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டிருந்த கேக்கை சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து வெட்டினார்கள். '36 வயதினிலே' படம் மூலம் ஜோதிகாவின் ரீ-என்ட்ரியை வெற்றிகரமாக துவக்கி வைத்தவரான ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் படம் என்பதால் அந்த நட்பின் அழைப்பால் 'காயம்குளம் கொச்சுன்னி' படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்துள்ளனர் சூர்யாவும் ஜோதிகாவும்.