‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நாச்சியார் டீசரில் கெட்டவார்த்தை பேசியது தொடர்பாக ஜோதிகா, பாலா மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாலா, இயக்கம் மற்றும் தயாரிப்பில், ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் நாச்சியார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஜோதிகா டீசரின் முடிவில் கெட்டவார்த்தை பேசியிருப்பார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து ஜோதிகா மற்றும் பாலா மீது கோவை, மேட்டுபாளையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த விஷயத்தை காரணம் காட்டி கரூர் குற்றவியல் நீதிமன்றத்திலும் ஜோதிகா மற்றும் பாலா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.