விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
இவன் வேறமாதிரி படத்தில் அறிமுகமானவர் சுரபி. அதன் பிறகு வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தார். அழகும், திறமையும் இருந்தாலும் வாய்ப்புகள் ஏனோ சுரபிக்கு வரவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு புகழ் என்ற படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தார். அந்தப் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதன் பிறகு தெலுங்கு சினிமாவிற்கு சென்று தனக்கான இடத்தை பிடித்து விட்டார். அட்டாக், ஜென்டில்மேன், உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது மீண்டும் தமிழுக்கு திரும்பி இருக்கிறார்.
அடங்காதே என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்து வரும் சுரபி. தெலுங்கு, தமிழில் தயாராகி உள்ள குறள் 388 என்ற படத்திலும் நடித்துள்ளார். இதில் விஷ்ணு மஞ்சு ஹீரோ. ஜி.எஸ்.கார்த்தி இயக்கி உள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தெலுங்கில் வோட்டர் என்ற தலைப்பில் வெளியாகும் குறள் 388, திருவள்ளுவர் எழுதிய குறளில் 388-வது குறளின் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தேர்தலின் போது போலியான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலுக்குப் பின் அதை மறந்து விடும் போலியான அரசியல் வாதிகளின் முகத்திரைகளை தோலுரிக்கும் கதையே குறள் 388 படத்தின் கதை.