தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கந்துவட்டி பிரச்சினையால் தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தற்கொலைக்கு காரணம் தயாரிப்பாளரும், சினிமா பைனானன்சியருமான அன்புசெழியன் தான் என்பதால் இன்னும் பரபரப்பு அதிகரித்துள்ளது.
அன்புசெழியனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் திரைத்துறையினர் அணி திரண்டுள்ளனர். எதிரானவர்கள் அணியில் விஷால், ஞானவேல்ராஜா, கார்த்தி, சி.வி.குமார், கரு.பழனியப்பன், பார்த்திபன் உள்பட பலர் இருக்கிறார்கள்.
ஆதரவாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, அம்மா கிரியேஷன் சிவா. விஜய் ஆண்டனி, தேவயானி, சுந்தர்.சி உள்ளிட்டோர் இருக்கிறார்கள். ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக்கூட்டம் வருகிற 30ம் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் சினிமாவை ஆட்டி படைக்கும் கந்துவட்டி பிரச்னை பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. கந்துவட்டியை சினிமாவை விட்டு ஒழித்தால் பண பிரச்சினையை எப்படி சமாளிப்பது. என்பது குறித்தும் விவாதிக்க இருக்கிறார்கள்.
கந்துவட்டிக்கு ஆதரவும், எதிர்ப்பும் தயாரிப்பாளர்களிடையே இருப்பதால் கூட்டத்தின் விவாதம் காரசாரமாக இருக்கும் என்கிறார்கள்.