ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் படமான பத்மாவதிக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. ராஜபுதனத்து அமைப்புகளும், பல மாநில அரசுகளும் படத்தை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. ஒரு திரைப்படத்தை பார்க்காமலேயே அதற்கு எதிர்ப்பு வலுத்து வருவதும். எதிர்ப்பவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் எதுவும் படத்தில் இல்லை என்கிற நிலையில் படத்துக்கு எதிர்ப்பு கிளம்புவதும் படைப்புலகத்தின் மீது தாக்குதல் என்றே திரையுலகினர் கருதுகிறார்கள். இதை அனுமதித்தால் எதிர்காலத்தில் வெறும் பொழுதுபோக்கு படங்கள் மட்டுமே வரும் வாய்ப்பிருப்பதாக நினைக்கிறார்கள்.
இதனால் பத்மாவதி படத்திற்கு தங்கள் ஆதரவை காட்டும் வகையில் இன்று மாலை 4.15 மணி முதல் 4.30 வரை 15 நிமிடங்கள் படப்பிடிப்பை நிறுத்த முடிவு செய்திருக்கிறர்கள். இந்திய திரைப்பட தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் அசோக் பண்டிட் கூறியதாவது:
பத்மாவதி படத்துக்கு வரும் எதிர்ப்பை பார்க்கும்போது நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வருகிறது. நமது கருத்துரிமையை நிலைநாட்டவும், மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் என்பதை தெரிவிக்கவும் இன்று 15 நிமிட படப்பிடிப்பை நிறுத்தி எதிர்ப்பை பதிவு செய்ய இருக்கிறோம். என்றார்.
இதுகுறித்து தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கமோ தயாரிப்பாளர் சங்கமோ இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.