ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது இந்து மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளர். அவரது புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 22ந் தேதி நடந்த ஒரு படவிழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் உலக இந்துக்களின் புனித கோவிலான திருப்பதி கோவில் உண்டியலை லஞ்சம் பெறும் உண்டியல் என்று கிண்டல் செய்துள்ளார். இது இந்துக்களையும், இந்துக்களின் மத நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும். கோவில் உண்டியலில் பணம் போட்டால் பாஸாகிவிடுவாயா? என்றும் கேட்டிருக்கிறார். கிறிஸ்தவரான எஸ்.ஏ.சந்திரசேகர் இந்து மத நம்பிக்கையில் தலையிட உரிமை இல்லை. அதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் வி.ஜி.நாராயணன்.