டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குனரும் நடிகருமான சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன் மேலாளரும், இணை தயாரிப்பாளரும், நெருங்கிய உறவினருமாக அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் மதுரை பைனான்சியர் அன்பு செழியனின் கந்துவட்டி கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். கடிதத்தின் அடிப்படையில் சசிகுமார் அன்புசெழியன் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் அன்புசெழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அன்பு செழியன் தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில் சசிகுமார் நேற்று மாலை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த், உதவி கமிஷனர் சம்பத் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரனை சுமார் 2 மணிநேரம் நடந்தது. சசிகுமாருடன் தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, சி.வி.குமார் ஆகியோரும் வந்தனர்.
விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகுமார், "என் வளர்ச்சிக்கு காரணமே அசோக்குமார் தான். அவன் மறைவில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. போலீஸ் விசாரணையில் எனக்கு தெரிந்த தகவல்களை சொன்னேன். அன்புசெழியனுக்கு ஆதரவாக கருத்து கூறுகிறவர்கள் அவர்களது தனிப்பட்ட கருத்துக்களை சொல்கிறார்கள். பைனான்சியர் அன்புச்செழியன் மீது இன்னும் பலர் புகார் அளிப்பார்கள்" என்றார்.