பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விரைவில் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரையும், கொள்கையையும் அறிவிக்க உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார். டில்லியில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த கமல் இதனை தெரிவித்துள்ளார்.
பேட்டியில் கமல் கூறுகையில், அரசியலுக்கு வர காரணமே எங்கும் மலிந்து கிடக்கும் ஊழலை துடைத்து எறிய வேண்டும் என்பது தான். தமிழக மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காவும் நான் அரசியலில் ஈடுபடுகிறேன்.
அரசியலில் என்னை முன்னிலைப்படுத்த விரும்பவில்லை. மாற்றத்தை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். மாற்றத்தை விரும்புபவர்கள் என் பக்கம் வந்து நிற்பார்கள். அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் தொழிலோ, சினிமா தயாரிப்பு போன்ற தொழிலோ அல்ல. அதனால் அரசியலில் தோல்வி பற்றி எனக்கு எந்த பயமும் கிடையாது.
விரைவில் என்னுடைய அரசியல் கட்சியின் பெயரையும், கொள்கையையும் வெளியிடுவேன். சித்தாந்தங்களின் அடிப்படையின் பாஜ., மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க மாட்டேன். மக்களுக்கு எது தேவையோ அதுவே என்னுடைய தேவை. ஆகையால் தமிழகத்தின் நலன் கருதி வேண்டுமானால் கூட்டணி வைக்கலாம். அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை. எந்த வகையிலான தீவிரவாதமானாலும் அதை நிச்சயம் ஆதரிக்கப் போவதில்லை என்றார்.
பத்மாவதி பட சர்ச்சை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கமல், நான் அந்த படத்தை பார்க்கவில்லை. பலர் அந்த படத்தை பார்க்காமலேயே தடை விதிக்க வேண்டும் என கூறுகிறார்கள். இது சரியல்ல.