ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
1991ல் மணிரத்னம் இயக்கிய படம் தளபதி. ரஜினி-மம்மூட்டி இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். இளையராஜா அந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்த சமயத்தில் சூப்பர் ஹிட்டான தளபதி படத்திற்கு பிறகு ரஜினியும், மம்மூட்டியும் இணைந்து நடிக்கவில்லை.
ஆனால் 26 வருடங்களுக்குப்பிறகு தற்போது அவர்கள் இருவரும் ஒரு மராத்தி படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கப்போகிறார்கள். தீபக் பாவேஷ் என்பவர் இயக்கும் அந்த படத்திற்கு பஷாயதன் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்குகிறது. ஆக, இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்துள்ள ரஜினி, தனது தாய்மொழியான மராத்தியில் இந்த படம் மூலம்தான் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.