'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல கர்நாடக இசை மேதை, பாரத ரத்னா விருது பெற்ற மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கொள்ளு பேத்தி ஐஸ்வர்யா. இவர் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி உள்ளார். டில்லி மற்றும் தாதா சாஹிப் குறும்பட விழாவில் வென்ற "ஈஷா" எனும் குறும்படம், "குறள் 146" என்ற பெயரில் படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் ஷூட்டிங் பாடல் பதிவுடன் ஆரம்பமானது. "அன்னை எத்தனை எத்தனையோ..." என்ற பாடலை ஐஸ்வர்யா பாடி அறிமுகமானார். பல படங்களில், கலை இயக்குநராக பணியாற்றிய உமா ஷங்கர் இப்படத்தின் இயக்குநர் ஆகி உள்ளார். ஐஸ்வர்யாவுடன் இணைந்து இப்பட இசை அமைப்பாளர் குரு கல்யாணும் பாடினார்.