டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த உஸ்மா அகமது என்ற பெண், மலேசியாவில் பணியாற்றிய போது பாகிஸ்தானியர் ஒருவரால் ஈர்க்கப்பட்டு, பாகிஸ்தான் அழைத்து செல்லப்பட்டு, அங்கு துப்பாக்கி முனையில் கட்டாய திருமணத்திற்கும், சித்ரவதைக்கும் உள்ளாக்கப்பட்டார். பின்னர் அங்குள்ள இந்திய தூதரகம் மூலமாக பத்திரமாக இந்தியா திரும்பியவர், பாகிஸ்தான் ஒரு மரணக்கிணறு, அந்நாட்டிற்கு செல்வது சுலபம், ஆனால் வெளியில் வர முடியாது. இந்தியா போன்ற ஒரு சுதந்திரமான பாதுகாப்பான நாடு இல்லை என்று கூறினார். இவரின் வாழ்க்கையை பாலிவுட்டில் சினிமாவாக எடுக்க உள்ளனர்.
சிவம் நாயர் இப்படத்தை இயக்க உள்ளார். இதில் உஸ்மா அகமதாக, இலியானா நடிக்க உள்ளார். இதுகுறித்து சிவர் நாயர் கூறுகையில், என்னுடைய படத்தில் இலியானாவை நடிக்க வைக்க விரும்புகிறேன். இதுதொடர்பாக அவரிடம் பேசினேன், அவருக்கும் பிடித்திருக்கிறது. உஸ்மாவையும் சந்தித்து பேசியுள்ளோம். தற்போது திரைக்கதை அமைக்கும் பணி நடக்கிறது. உஸ்மா ரோலுக்கு இலியானா தான் மிக பொருத்தமாக இருப்பார் என்றார்.