இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இயக்குனர் பாலா இயக்கி வரும் வரும் படம் நாச்சியார். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டீசரில் போலீசாக நடிக்கும் ஜோதிகா, ஆபாச வார்த்தை ஒன்றை பேசியுள்ளார். இதுகுறித்து டீசருக்கு இணையதளத்தில் ஆதரவும், எதிர்ப்பும் குவிந்து வருகிறது. இந்த நிலையில் பாலா, ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேட்டுபாளையத்தைச் சேர்ந்த ராஜன் என்பர் கோவை மாவட்ட உரிமையியல் நீதமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் "பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் நாச்சியார் பட டீரில் ஆபாச வசனம் இடம்பெற்றுள்ளது. இதை எழுதி, இயக்கிய பாலா, நடித்த ஜோதிகா மீது இந்திய தண்டனைச் சட்டம் 294 மற்றும் தகவல் உரிமைச் சட்டம் 67ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.