கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
நடிகர் சிம்புவுக்கு எதிராக நடவடிக்கையை எடுத்துள்ள தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகின்றனர், என, இயக்குனர் அமீர் புகார் தெரிவித்துள்ளார்.
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை, அதீக் ரவிச்சந்திரன் இயக்கினார். சிம்பு மூன்று வேடங்களில் நடித்த இப்படம், படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து, இதன் இரண்டாம் பாகம் தயாரிப்பு, கிடப்பில் போனது.
இந்நிலையில், குறித்த காலத்திற்குள், சிம்பு படப்பிடிப்பில் பங்கேற்காமல் போனதால், எனக்கு, 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது என, தயாரிப்பாளர் சங்கத்தில், ராயப்பன் புகார் அளித்தார். இவரை தொடர்ந்து, மேலும் சிலரும், சிம்பு மீது, சங்கத்தில் புகார் அளித்துள்ளதாகவும், அதனால், சிம்புவுக்கு, ரெட் கார்ட் தரும் நடவடிக்கையில், தயாரிப்பாளர் சங்கம் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இயக்குனர் அமீர் கூறியதாவது : சிம்பு தவறு செய்யவில்லை என, நான் கூறவில்லை; அவர் தவறு செய்திருந்தால், தயாரிப்பாளர் கொடுத்த புகாரில் நியாயம் உள்ளது. அதை தீர்க்க வேண்டிய பொறுப்பு, நடிகர் சங்கத்திற்கும் உள்ளது. இவ்விஷயத்தில் புகார் அளித்தவர் யார்; எதற்காக அளித்தார் என்பதையும் ஆராய வேண்டும்.
தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்க தேர்தலின்போது, விஷால் அணிக்கு எதிராக பேசியவர் சிம்பு. அதை மனதில் வைத்து, அவரை பழிவாங்க, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முயற்சிக்கின்றனர். சிம்புவை வீழ்த்த திட்டமிடுகின்றனர். சிம்புவை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என, இயக்குனர் மணிரத்னத்திடம், சிலர் கூறியுள்ளனர். இது, மிகவும் கீழ்த்தரமானது.
சிம்புவைக் கேட்டால், படம் வெளி வருவதற்காக, என் சம்பளத்தில், மூன்று கோடி ரூபாயை விட்டுக் கொடுத்தேன்; அதைப்பற்றி யாரும் பேசவில்லையே... ஏன்? எனக் கேட்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.