‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகை அமலாபால் புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து தனது காரை பதிவு செய்து கேரளாவில் பயன்படுத்தி வருவதாகவும் இதன்மூலம் அவர் ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் இப்போதுவரை சர்ச்சை ஓடிக்கொண்டு இருக்கிறது. இதுகுறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது அந்த வீட்டிற்கே சென்று புதுச்சேரியில் போலீசார் நடத்திய விசாரணை குறித்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது..
அதன்படி அமலாபால் புதுச்சேரியில் தான் வசிப்பதாக காட்டிக்கொண்டுள்ள வீடு, ஒரே ஓர் அறையை மட்டுமே கொண்டது.. அதுவும் மூன்றாவது மாடியில் உள்ளது. இந்த வீட்டின் உரிமையாளர் உமேஷ், அமலாபால் இங்கே வீடு (!?) வாடகைக்கு எடுத்தது உண்மை என்றும் அதற்கான அக்ரிமென்ட் முறையாக போடப்பட்டுள்ளது என்றும் கூறினாலும், அதற்கான ஆதாரங்களை போலீசாரிடம் சமர்ப்பிக்கவில்லை.
குறைவான வரி கட்டி, சொகுசு காரை பதிவு செய்வதற்காகவே, இரண்டாயிரம் ரூபாய் கூட வாடகை பெறாத ஒரு ஒண்டிக்குடித்தன அறையை அமலாபால் வாடகைக்கு பிடித்துள்ளார் என்பதை புதுச்சேரி போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.