இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கேரளாவில் நடிகை கடத்தல் விவகாரத்தில் சிக்கி கைதாகி, சிறைசென்று, தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் மலையாள நடிகர் திலீப்.. சமீபத்தில் இந்த வழக்கின் சார்ஜ் ஷீட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் 11வது குற்றவாளியாக இருந்த திலீப்பை 8வது இடத்திற்கு மாற்றியுள்ளனர் விசாரணை அதிகாரிகள். அதுமட்டுமல்ல, அவரது முன்னாள் மனைவி மஞ்சு வாரியரை 11வது சாட்சியாகவும் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனை 34வது சாட்சியாகவும் இணைத்துள்ளனர்.
தனக்கும் காவ்யா மாதவனுக்குமான தொடர்பை, தனது முதல் மனைவி மஞ்சு வாரியரிடம் சொல்லிவிட்டார் என்பதனாலேயே, தற்போது பாதிக்கப்பட்டுள்ள நடிகை மீது நீண்ட நாட்களாக காழ்ப்புணர்ச்சியை கொண்டிருந்தார் திலீப் என இறுதி அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனராம் விசாரணை அதிகாரிகள்.