ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சர்ச்சைக்குரிய பத்மாவதி படத்தை, பிரிட்டனில் வெளியிட, அந்நாட்டு திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் வெளிநாடுகளில் பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் பிரபல இயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலி, பத்மாவதி என்ற ஹிந்தி படத்தை இயக்கி உள்ளார். ராஜஸ்தானை ஆட்சி செய்த, ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்த, ராணி பத்மினியின் வாழ்க்கையை மையமாக வைத்து, இந்த படம் தயாராகிறது. இதில், ராணி பத்மினியாக, பிரபல நடிகை, தீபிகா படுகோனே, 31, நடித்துள்ளார். அவரது கணவர், ரதன் சிங்காக, ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக, ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.
இந்த படத்தில், ராஜபுத்ர சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, வட மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. படத்தின் இயக்குனர், நடிகை தீபிகா படுகோனே ஆகியோருக்கு, மிரட்டல்கள் விடுக்கப்பட்டு உள்ளன. இதனால், அடுத்த மாதம் வெளியாக இருந்த இந்த படம், 2018க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தை, பிரிட்டனில் திரையிட, அந்நாட்டு தணிக்கை வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த படத்தில் இருந்து, ஒரு காட்சியை கூட நீக்காமல் திரையிட அனுமதி வழங்கியுள்ள, பிரிட்டன் திரைப்பட தணிக்கை வாரியம், படத்துக்கு, 12 ஏ என்ற தரத்தையும் வழங்கி உள்ளது. இதன்படி, வன்முறை அதிகம் உள்ளதால், 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், பெற்றோருடன் மட்டுமே படம் பார்க்க வேண்டும் என, பிரிட்டன் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்திய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி வழங்கிய பின்னே, பிரிட்டன் உள்ளிட்ட மற்ற நாடுகளில், படத்தை வெளியிடுவது என, முடிவு செய்துள்ளோம் என, பத்மாவதி படத்தை தயாரித்துள்ள நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெளிநாட்டிலும் தடை? : இந்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் அனுமதி இல்லாமல், வெளிநாடுகளில், பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என, சர்மா என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக, 28ல் விசாரிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.