ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல பாடலாசிரியர் சினேகன். இவர் விஜய் டி.வி. நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கடைசி வரை வந்த இவர் தான் டைட்டில் வெல்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இறுதிச் சுற்றில் ஆரவ் வென்றார்.
டைட்டில் வென்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு என்ன செய்வீர்கள் என்று சினேகனிடம், கமல்ஹாசன் கேட்டதற்கு "என் சொந்த கிராமத்தில் நூலகம் கட்டுவேன்" என்று கூறினார். இப்போது டைட்டில் வெல்லாவிட்டாலும் கொடுத்த வாக்குறுதிப்படி சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் புதுக்காரிபட்டியில் நூலகம் அமைக்கும் பணியை தொடங்கிவிட்டார் சினேகன். இந்த நூலகத்திற்காக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளார்.
25 அறிஞர்களை கொண்டு நூல்கள் தேர்வு செய்யப்பட்டு நூலகத்தில் வைக்கப்படுகிறது. ஆராய்ச்சி நூல்கள், பழமையான நூல்கள் உள்பட 1 லட்சம் புத்தகங்களை கொண்டு சுமார் ஒரு கோடி செலவில் இந்த நூலகம் அமைய இருக்கிறது. இதற்கான அறிமுக விழா சென்னையில் நடந்தது. இசை அமைப்பாளர்கள் தாஜ்நூர், சத்யா, இயக்குனர் வேலுபிரபாகரன், நடிகர் வையாபுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.