தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரமேம் படத்தில், மலர் டீச்சராக நடித்து, ரசிகர்கள் மனம் கவர்ந்த சாய் பல்லவி, அதன்பின், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து விட்டார். ஆனால், தமிழ் படத்தில் மட்டும் நடிக்க யோசித்தார். இத்தனைக்கும் இவர், தமிழகத்தின் கோத்தகிரியைச் சேர்ந்தவர்.
பெரிய பட்ஜெட், பெரிய நடிகர், பெரிய இயக்குனர் என, துாண்டில் போட்டு காத்திருந்தார். நீண்ட நாள் காத்திருப்புக்கு பின், விஜய் இயக்கத்தில், கரு என்ற படத்தின் மூலம், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தரிசனம் தர தயாராகியுள்ளார், சாய் பல்லவி. இந்த இடைவெளியில், தெலுங்கில் இவர் நடித்த, பிடா படம், செம ஹிட் அடித்து, அங்கும் அம்மணிக்கு பயங்கர வரவேற்பு.
தமிழ், என் தாய்மொழி. இங்கு, ஏனோ, தானேவென்ற கேரக்டர்களில் நடிக்க சம்மதிக்கவில்லை. நல்ல கேரக்டருக்காக காத்திருந்தேன். அது, இப்போது தான், கிடைத்தது என்கிறார், சாய் பல்லவி. மாரி - 2 படத்திலும் சாய் பல்லவி நடிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மலர் டீச்சர், ஜார்ஜியாவில் டாக்டருக்கு படித்தவர் என்பது கூடுதல் தகவல்.