விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது முடிவடையும், படம் எப்போது திரைக்கு வரும் என்று அவருக்கும் தெரியாது, அவரை வைத்து படம் எடுப்பவர்களுக்கும் தெரியாது. அப்படிப்பட்ட கௌதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய தயாரிப்பில் இன்னொரு இயக்குநரை வைத்து எடுக்கும் படத்தை மட்டும் 45 நாட்களில் எடுக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார்.
'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் வெற்றிபெற்ற இளம் இயக்குநரான கார்த்திக் நரேன், இயக்கத்தில் உருவாகி வரும் இரண்டாவது படம் 'நரகாசூரன்'. இப்படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி 45 நாட்களை விட குறைவாக 41 நாட்களில் முடித்து, இப்படத்தின் தயாரிப்பாளரான கௌதம் வாசு தேவனை ஆச்சர்யப்படுத்தி, அவருடைய பாராட்டுக்களையும் பெற்றார்.
அதே வேகத்தில் போஸ்ட்புராடக்ஷன் வேலையைத் தொடங்கிய கார்த்திக் நரேன், தற்போது இப்படத்தின் டீஸர் வெளியீட்டு தேதியையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதாவது, வருகிற 25-ஆம் தேதி 'நரகாசூரன்' படத்தின் டீஸர் வெளியாகிறது.
நரகாசூரன் படத்தின் ரிலீஸ் தேதியையும் மிக விரைவில் அறிவிக்க இருக்கிறார். நரகாசூரன் படத்தில் அரவிந்த் சாமி, சந்தீப். இந்திரஜித், ஸ்ரேயா முதலானோர் நடிக்க மாயா புகழ் ரான் எத்தன் யோஹான் இசை அமைத்து வருகிறார்.
கார்த்திக் நரேன்னின் வேகத்தைப் பார்த்தாவது கௌதம் வாசுதேவ் மேனன் திருந்தினால் சரி...!