இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலை தமிழ்த் திரையுலகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை வருடங்களாக தாங்களும் அவரிடம் தான் பைனான்ஸ் வாங்கி படம் எடுக்கிறோம் என்று சொல்லாத பலரும் தற்போது ஒவ்வொருவராக சொல்லி வருகிறார்கள்.
அன்புச்செழியன்தான் தமிழ் சினிமாவின் மையமாக கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறார் என்பது திரையுலகத்தில் உள்ள பலருக்கும் தெரியும். அவருக்குத் திருப்பித் தரவேண்டிய பணத்தைத் தரவில்லை என்றால் அந்தப் படம் வெளியில் வர அவ்வளவு சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இருந்தாலும் அனைத்தையும் சமாளித்துத் தான் பலரும் அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படம் எடுக்கிறார்கள்.
அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட நேற்று முன்தினம் அது பற்றி தகவல் அறிந்ததும் இயக்குனர் பாலா, சசிகுமாரைத் தேடிச் சென்றுள்ளார். அவர் ஆறுதல் சொல்லத்தான் வருகிறார் என சசி தரப்பினர் முதலில் நினைத்தார்களாம். ஆனால், அவரோ அன்புச் செழியன் மீது எந்தப் புகாரும் கொடுக்க வேண்டாம், பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்டதும் கோபம் கொண்ட இயக்குனர் அமீர், தற்கொலையால் இங்கு அனைவரும் தடுமாறிக் கொண்டிருக்கிறோம், இந்த நேரத்தில் பஞ்சாயத்தா, என பாலாவை சரமாரியாகத் திட்டிவிட்டாராம்.
'நீ இயக்கிய 'தாரை தப்பட்டை' படத்தால் தான் சசிகுமார், இந்த நிலைமைக்கு வந்துவிட்டார், நீயே அந்தக் கடனை அடைத்துவிடு' என்றாராம். இதனால், கோபம் கொண்ட பாலா உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறியிருக்கிறார். அதன்பின்தான் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்களாம்.
பாலாவிடம் தான் அமீரும், சசிகுமாரும் உதவி இயக்குனர்களாகப் பணியாற்றியவர்கள். பாலாவும், அமீரும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், பின்னர் பிரிந்துவிட்டார்கள். தான் சொல்வதை சசிகுமார் தரப்பினர் கேட்கப் போவதில்லை என்று தெரிந்த பாலா தற்போது அன்புச்செழியனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளதாகத் திரையுலகத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
அவருடைய ஆலோசனையின்படி தான் இயக்குனர் சீனு ராமசாமி இன்று டுவிட்டரில் அன்புச் செழியன் 'உத்தமர்' என்று டுவீட் போட்டாராம். கடும் எதிர்ப்புகள் வந்ததையடுத்து சில மணி நேரங்களில் அந்த டுவீட்டை நீக்கி விட்டு, தொலைபேசியையும் அணைத்துவிட்டார் சீனு ராமசாமி.
அடுத்து திரையுலகத்தில் உள்ள மற்றவர்களையும் அன்புச் செழியனுக்கு ஆதரவாக அறிக்கை கொடுக்க அவர் முயற்சித்து வருவதாகவும் சொல்கிறார்கள். இதனிடையே, பாலா இயக்கத்தில் முதலில் அஜித் நடிப்பதாக இருந்த 'நான் கடவுள்' பட விவகாரத்தில் அஜித் மிரட்டப்பட்ட சம்பவமும் நேற்று மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால், அஜித் ரசிகர்கள் நேற்று முதலே பாலாவுக்கு எதிராக கடுமையான பதிவுகளைப் போட்டு வருகிறார்கள்.
தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலை திரையுலகத்தில் தற்போது கடும் சூறாவளியாக மாறியுள்ளது. இது வலுப்பெற்று நல்லது நடக்குமா அல்லது வலுவிழந்து காணாமல் போய்விடுமா என்று திரையுலகத்தில் உள்ள பலரும் கிசுகிசுத்து வருகிறார்கள்.