'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு அன்புசெழியன் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இதனால் திரையுலகினர் பலரும் அன்புசெழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் இயக்குநர் சீனு ராமசாமியோ, அன்பு செழியன் போன்ற உத்தமர் யாரும் இல்லை என்று ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டார்.
அன்புசெழியனை பற்றி நன்று தெரிந்து இருந்தும் சீனு ராமசாமி அவருக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது. அதோடு திரையுலகினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அன்புசெழியன் உத்தமர் என்று தான் போட்ட டுவீட்டை தன் டுவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார் சீனு ராமசாமி.