விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
சின்னத்திரை நடிகராக இருந்து பெரிய திரைக்கு வந்தவர் போஸ் வெங்கட். 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் போராடிக் கொண்டிருக்கும் போஸ் வெங்கட்டிற்கு தீரன் அதிகாரம் ஒன்று படம் தனித்த அடையாளத்தை கொடுத்திருக்கிறது. படம் முழுக்க கார்த்திக்குடன் வரும் போலீசாக நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
சிவாஜி, தலைநகரம், சிங்கம், கோ, கவண் என்று பரவலாக கவனிக்கப்படும் நடிகராக நான் இருந்தாலும், தீரன் எனக்கு ஒரு தனி அடையாளத்தை தந்திருக்கிறது. தமிழ்நாடு அரசாங்கத்தின் அப்பாய்ட்மண்ட் கொடுக்கப்படாத போலிஸ் நான். அந்த அளவுக்கு 40க்கும் மேற்பட்ட படங்களில் நான் போலிஸாக நடித்திருக்கிறேன். அவை அனைத்திலிருந்தும் முற்றிலுமாக வேறுபட்டவன் தீரன் “சத்யா”. நிஜப் போலிசின் மேனரிசம், அவர்களது அன்றாட பிரச்னைகள், குடும்பத்துடனான உறவு என்று இயல்பான போலிஸ்காரார் போலவே நடித்திருப்பதாக பாராட்டி வருகிறார்கள். அனைவருக்கும் நன்றி.
தீரனைத் தொடர்ந்து, சுசீந்திரன், பிரபுசாலமன் ஆகியோர் தற்போது இயக்கிவரும் படங்களில் கதையின் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். மலையாள படமொன்றில் மெயின் வில்லனாகவும் ஒரு மலேசிய படத்திலும் நடிக்கிறேன் என்றார் போஸ் வெங்கட்.