தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணாவத். நல்ல படங்களை தேர்ந்தெடுத்து வெற்றியை கொடுத்து வரும் நடிகை. தமிழில் தாம் தூம் படத்தில் நடித்தவர். தற்போது கங்கனா, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகி வரும் மனிகர்னிகா படத்தில் ஜான்சி ராணியாக நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு ஜான்சி ராணி வாழ்ந்த ஜோத்பூர் கோட்டையில் நடந்து வருகிறது. தற்போது அங்கு போர் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்களுடன் நடத்தும் இந்த போரில் ஜான்சி ராணி 40 அடிய உயர மதில் சுவரில் ஏறி குதிக்கும் காட்சி நேற்று படமாக்கப்பட்டது. அப்போது கங்கனா ரணாவத், ஜான்சி ராணி வேடத்தில் 40 அடி உயர சுவரை ரோப் உதவியுடன் ஏறி குதித்தார். இதற்கான ரிகர்சல் நடந்தபோது சுவற்றில் ஏறிவிட்ட கங்கனா, குதிக்கும்போது டைமிங்கில் மிஸ் ஆனதால் தடுமாறி தரையில் விழுந்தார்.
இதில் அவரது கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எலும்பு பிசகு ஏற்பட்டிருப்பதால் டாக்டர்கள் ஒருவாரம் அவரை ஓய்வெடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் தற்போது கங்கனா இல்லாத மற்ற காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.