ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மதுரை:கந்துவட்டி பிரச்னை அனைவரையும் பாதித்துள்ளது என நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கூறினார்.
கடன் பிரச்னையால் தயாரிப்பளர் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவர் கந்து வட்டி கேட்டு அன்பு செழியன் என்பவர் மிரட்டியதால் இந்த முடிவு எடுத்ததாக கூறினார். அசோக்குமார் உடல் இன்று மதுரை வந்தது. உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் மதுரை வந்த தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கந்துவட்டி பிரச்னையால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் மரணம் தான் கடைசி மரணமாக இருக்க வேண்டும். இது புரட்சிக்கான மரணமாகவே கருதுகிறேன். கந்து வட்டி பிரச்னையால் நான், கவுதம் மேனன், பார்த்திபன் என எல்லோரும் சிக்கியுள்ளோம். அன்புசெழியன் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்பு செழியனுக்கு ஆதரவாக அமைச்சர் , எம்.எல்.ஏ. யார் வந்தாலும் விடமாட்டோம். இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்க கூடாது.நடக்கவும் விட மாட்டோம். இவ்வாறு விஷால் கூறினார்