ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னை: சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை சம்பவத்திற்கு சினமா தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் சங்கம் துணை நிற்கும் என தெரிவித்துள்ளது. இது குறித்து நடிகர் சங்கம் தெரிவித்திருப்பதாவது: அசோக்குமார் தற்கொலை சம்பவம்திரைத்துறையை சுயஆய்வு செய்துகொள்வதற்கான அபாய எச்சரிக்கையாகும். கலைஞர்கள், தொழில்நுட்பவல்லுநர்கள், முதலீட்டாளர்கள் என ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளோம். தவறு இழைத்தோருக்கு சட்டம் தண்டனை தரட்டும். தண்டனை இனி அதீத வட்டி வாங்குவோருக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும் எனநடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
நடிகர்கள் விஷால் ,கருணாஸ் அஞ்சலி
மதுரை: தற்கொலை செய்து கொண்ட சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் உடலுக்கு நடிகர்கள் விஷால் கருணாஸ் நேரில் அஞ்சலி செலுத்தினர். சென்னை அபிராமபுரத்தில் தற்கொலை செய்து கொண்ட சினிமா தயாரிப்பாளர் உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. கோமதி நகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகர்கள் விஷால், கருணாஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.