விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
கந்து வட்டி பிரச்னையால் சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை அடுத்து கந்து வட்டி பிரச்னை பற்றி திரையுலகினர் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
விரைவில் இந்த கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பொறுத்தது போதும். கூட்டமைப்பு என்ற பெயரில் தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி கும்பலுக்கும் கட்டப்பஞ்சாயத்து நபர்களுக்கும் நேரடி எச்சரிக்கை விடுகிறேன். தமிழ் சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று கூறியிருந்தார்.
விஷாலின் இந்த அறிக்கையில் அன்புச் செழியன் பெயரை நேரடியாக சொல்லவேயில்லை. இந்நிலையில் தனது விஷால் பிலிம் பேக்டரியின் டுவிட்டர் பக்கத்தில் அன்பு செழியனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது...
அசோக் குமார் பிரச்சினையில் அன்புச்செழியன் நடந்து கொண்டது முற்றிலும் தவறானது. கொஞ்சமும் நியாயமற்ற இச்செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். வாங்கிய கடனைத் திரும்பத்தரவே நாங்கள் அனைவரும் இருக்கிறோம். எங்கும் ஓடிவிட மாட்டோம். கடினமாக உழைத்து நிச்சயம் கடனைத் திருப்பித் தருவோம். எனவே, பலத்தைப் பிரயோகப்படுத்தாதீர்கள்.
இவ்வாறு விஷால் கூறியிருக்கிறார்.