இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் ரஜினிகாந்த், ராகவேந்திரர் வழிபாட்டை முதன்மையாகச் செய்பவர். அதனால் தான் அவருடைய நூறாவது படமாக 'ஸ்ரீராகவேந்திரர்' படத்தில் நடித்தார். எந்த ஒரு முக்கிய விஷயத்தை செய்வதென்றாலும் அவர் ராகவேந்திரரை வழிபட்டுத்தான் ஆரம்பிப்பார்.
நேற்று ரஜினிகாந்த் திடீரென மந்திராலயத்தில் உள்ள ராகவேந்திரர் கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். 'காலா, 2.0' ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களைச் சந்தித்தார், அடுத்த கட்டமாக மீண்டும் ரசிகர்களைச் சந்திப்பார் என்று சொல்லப்பட்டது. அவர் இரண்டு படங்களின் நடிப்பிலும் பிஸியாக இருந்ததால் ரசிகர்களைச் சந்திக்க முடியவில்லை என்றார்கள். ராகவேந்திரரை தரிசித்திருப்பதன் மூலம் அவருடைய அரசியல் நுழைவுக்கான ஆசியைப் பெற்றிருப்பாரோ என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.
இதனிடையே, கடந்த சில வாரங்களளாகவே ரஜினிகாந்த் அவருடைய பிறந்தநாளில் அவருடைய அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி அறிவிக்க உள்ளார் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவர் தற்போது இருக்கும் கட்சிகள் ஏதாவது ஒன்றில் இணைவாரா, அல்லது தனிக் கட்சி ஆரம்பிப்பாரா என்பதுதான் கேள்வி.
ஒரு பக்கம் கமல்ஹாசனும் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். ரஜினிகாந்தும் அரசியல் கட்சி ஆரம்பித்தால் ஒரே காலகட்டத்தில் ஒன்றாக வளர்ந்த இருவரும் தனித் தனியாக அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாகவும் வளர முடியுமா என்றும் பார்க்க வேண்டியிருக்கிறது. ரஜினியின் அரசியில் நிலைப்பாடு இன்னும் 20 நாட்களில் தெரிந்துவிடும்.