'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பத்மாவதி படத்துக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் படத்தை வெளியிட மாட்டோம் என்று அந்தந்த மாநில முதல்வர்களே அறிவித்துள்ளனர். இந்த நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங்கும் படத்தை திரையிட மாட்டோம் என்று அறிவித்துள்ளார்.
இதன் அடுத்த கட்டமாக படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி மீதும், நடித்த தீபிகா படுகோனே மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் வலியுறுத்தி உள்ளார். கோக்பூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியிருப்பதாவது:
பத்மாவதி பட பிரச்சினைக்கு இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியும், நடிகை தீபிகா படுகோனேவும் முக்கிய காரணம். மக்களின் உணர்வுகளோடு யாரும் விளையாடக்கூடாது. சிலர் இதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். படத்துக்கு எதிராக மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். அவர்களுடன் மக்களின் உணர்வுகளை புண்படுத்திய சஞ்சய் லீலா பன்சாலி மீதும், தீபிகா படுகோனே மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உ.பி.முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.