விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி படம் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. அதில் நடித்த நடிகை தீபிகா படுகோனேவை உயிருடன் கொளுத்துங்கள் என்றும், அவர் தலைக்கு 10 கோடி பரிசு அறிவித்தும் சில மதவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் பேசி வருகிறார்கள். மாநில அரசுகள் படத்தை தடை செய்து வருகிறது. இதனால் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும் தீபிகா தனது நிகழ்ச்சிகள், படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்.
ஐதராபாத்தில் வருகிற 28ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைக்க இருக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் தீபிகா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள ஒப்புதல் அளித்திருந்தார். தற்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாது என்று மாநில அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.
தீபிகா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இதனால் தங்கள் மாநில பிரஞையை பாதுகாக்குமாறு கர்நாடக அரசு மற்ற மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதற்கிடையில் நடிகர்கள் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்ட பலர் தீபிகாவுக்கு ஆதரவும், ஆறுதலும் தெரிவித்துள்ளனர்.