தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்நாட்டில் சமீபகாலமாக கந்துவட்டி கொடுமையால் ஏற்படும் தற்கொலை மரணங்கள் அதிகரித்து வருகிறது. திருநெல்வேலியில் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டு கந்து வட்டியின் கொடுமைகளை நாட்டிற்கு உணர்த்தியது. தற்போது தமிழ்த் திரையுலகத்தில் முக்கிய இடத்தில் இருக்கும் சசிகுமாரின் உறவினரும், இணைதயாரிப்பாளருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகத்தில் அவரைப் போலவே இன்னும் பல தயாரிப்பாளர்கள் வட்டிக்கு வாங்கித்தான் படமெடுக்கிறார்கள். அப்படி வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் அவர்கள் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றால் அவர்களால் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாது. அந்தக் குறிப்பிட்ட பைனான்சியர் கைவசம் தான் திரையுலகத்தின் முக்கியமான பல சங்கங்கள் உள்ளதாக திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள். அவர் என்ன சொல்கிறாரோ அதைத் தான் சங்கத்தில் உள்ளவர்களும் செய்வார்கள் என்றும் சொல்கிறார்கள்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால் கூட அவரிடம் பைனான்ஸ் பெற்றுத்தான் படத்தைத் தயாரித்து வருகிறார் என்கிறார்கள். விஷால் பட விழாக்களில் அவர் தவறாமல் கலந்து கொள்வார். தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் அனைவருக்கும், திரையுலகத்தில் இருக்கும் அனைவருக்கும் அந்த பைனான்சியரைப் பற்றி நன்றாகவே தெரியும். சில வருடங்களக்கு முன்பு முன்னணி நடிகை ஒருவர் கூட அவரிடம் கடன் வாங்கி விட்டு பலத்த கஷ்டங்களை அனுபவித்தார். அந்தக் கடனை அடைப்பதற்காகவே அவர் டிவி சீரியலிலும் நடித்தார்.
நேற்று விஷால் இதுவே கந்துவட்டி கொடுமையால் நடக்கும் கடைசி தற்கொலையாக இருக்கட்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். விஷால், அறிக்கையுடன் நிறுத்திவிடாமல், அந்த பைனான்சியரிடம் சிக்கியுள்ள மற்ற தயாரிப்பாளர்களையும் காப்பாற்ற வேண்டும் என திரையுலகத்தில் பலரும் தற்போது குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
அந்த பைனான்சியர் சொல்வதைக் கேட்கும் சங்கத்தினர் பற்றி காவல் துறையிடமோ, அரசிடமோ புகார் தெரிவித்து தமிழ்த் திரையுலகத்தைக் காப்பாற்ற வேண்டும் என அமீர், சேரன், சமுத்திரக்கனி, கரு பழனியப்பன் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்துள்ளார்கள். நேற்று அமீர் கூட செய்தியாளர்களிடம் பேசும் போது, பாதிக்கப்பட்டவர்கள் யார் பேச வருகிறார்கள், படங்களில் மட்டும் தான் வீர வசனம் பேசுகிறார்கள் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.