Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர் தற்கொலை : அறிக்கையோடு இல்லாமல் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா ?

22 நவ, 2017 - 10:48 IST
எழுத்தின் அளவு:
Did-Producer-council-take-action-against-Anbu

தமிழ்நாட்டில் சமீபகாலமாக கந்துவட்டி கொடுமையால் ஏற்படும் தற்கொலை மரணங்கள் அதிகரித்து வருகிறது. திருநெல்வேலியில் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டு கந்து வட்டியின் கொடுமைகளை நாட்டிற்கு உணர்த்தியது. தற்போது தமிழ்த் திரையுலகத்தில் முக்கிய இடத்தில் இருக்கும் சசிகுமாரின் உறவினரும், இணைதயாரிப்பாளருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகத்தில் அவரைப் போலவே இன்னும் பல தயாரிப்பாளர்கள் வட்டிக்கு வாங்கித்தான் படமெடுக்கிறார்கள். அப்படி வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் அவர்கள் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றால் அவர்களால் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாது. அந்தக் குறிப்பிட்ட பைனான்சியர் கைவசம் தான் திரையுலகத்தின் முக்கியமான பல சங்கங்கள் உள்ளதாக திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள். அவர் என்ன சொல்கிறாரோ அதைத் தான் சங்கத்தில் உள்ளவர்களும் செய்வார்கள் என்றும் சொல்கிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால் கூட அவரிடம் பைனான்ஸ் பெற்றுத்தான் படத்தைத் தயாரித்து வருகிறார் என்கிறார்கள். விஷால் பட விழாக்களில் அவர் தவறாமல் கலந்து கொள்வார். தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் அனைவருக்கும், திரையுலகத்தில் இருக்கும் அனைவருக்கும் அந்த பைனான்சியரைப் பற்றி நன்றாகவே தெரியும். சில வருடங்களக்கு முன்பு முன்னணி நடிகை ஒருவர் கூட அவரிடம் கடன் வாங்கி விட்டு பலத்த கஷ்டங்களை அனுபவித்தார். அந்தக் கடனை அடைப்பதற்காகவே அவர் டிவி சீரியலிலும் நடித்தார்.

நேற்று விஷால் இதுவே கந்துவட்டி கொடுமையால் நடக்கும் கடைசி தற்கொலையாக இருக்கட்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். விஷால், அறிக்கையுடன் நிறுத்திவிடாமல், அந்த பைனான்சியரிடம் சிக்கியுள்ள மற்ற தயாரிப்பாளர்களையும் காப்பாற்ற வேண்டும் என திரையுலகத்தில் பலரும் தற்போது குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அந்த பைனான்சியர் சொல்வதைக் கேட்கும் சங்கத்தினர் பற்றி காவல் துறையிடமோ, அரசிடமோ புகார் தெரிவித்து தமிழ்த் திரையுலகத்தைக் காப்பாற்ற வேண்டும் என அமீர், சேரன், சமுத்திரக்கனி, கரு பழனியப்பன் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்துள்ளார்கள். நேற்று அமீர் கூட செய்தியாளர்களிடம் பேசும் போது, பாதிக்கப்பட்டவர்கள் யார் பேச வருகிறார்கள், படங்களில் மட்டும் தான் வீர வசனம் பேசுகிறார்கள் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in