அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தீவிரமான அரசியல் கருத்துக்களை டுவிட்டர் மூலம் கூறிவருகிறார். அரசியல் கட்சி தொடங்குவதிலும் மும்முரமாக இருக்கிறார். ஆளும் கட்சியின் ஊழலையும், மத்திய அரசின் முடிவுகளையும் கடுமையாக எதிர்த்து எழுதி வருகிறார்.
மாநில அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த மாநில அமைச்சர்கள். "கமல் பொதுப்படையாக ஊழல் குற்றச்சாட்டு சொல்லக்கூடாது. ஊழல் நடந்திருந்தால் அதை ஆதாரத்துடன் வெளியிட்டு குற்றம் சாட்டினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார்கள்.
இந்த நிலையில் நேற்று கமல் தனது டுவிட்டர் மூலம் முதல் ஊழல் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். தன்னை பாரதியாராக சித்திரித்து அந்த தோற்றத்தில் ஊழலுக்கான வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார். சென்னை மந்தவெளி பகுதியில் சாலை போடுவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் 35 லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருப்பதை கமலுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அறப்போர் இயக்கத்தினர் கண்டுபிடித்து அதனை வீடியோ ஆதாரமாக வெளியிட்டனர்.
அந்த ஆதாரங்களை வெளியிட்டு கமல் தனது டுவிட்டரில், "அறப்போர் இயக்க சகோதரர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும். என்னை கேள்வியும், ஆதாரமும் கேட்போருக்கு இதுவே போதுமான பதில், மேலும் தொடருமாம் இதுபோன்ற ஆதாரங்கள்" என்ற எழுதியிருக்கிறார்.