தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகில் இன்றைய இளம் ரசிகர்களின் அபிமான இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். அவர் இசையமைத்து வெளிவந்த 'வேலைக்காரன்' படப் பாடலான 'கருத்தவன்லாம் கலீஜாம்...' பாடல் படம் வெளிவருவதற்கு முன்பாகவே யு டியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. மற்றொரு பாடலான 'இறைவா' 50 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. 'தானா சேர்ந்த கூட்டம்' படப் பாடலான 'சொடக்கு மேல...' பாடல் யு டியூபில் 70 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
தமிழுக்கு அடுத்து தெலுங்கில் த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தில் இடம் பெற்ற 'பைட்டிக்கொச்சி சூஸ்தே...' பாடல் 40 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. தெலுங்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு ஆந்திரப் பிரதேச அரசு ஆதரவுடன் அமராவதி நகரில் நடைபெற்ற சமூக வலைத்தள மாநாடு மற்றும் விருதுகள் விழாவில் அனிருத்துக்கு 'சமூக வலைத்தளங்களில் மிகவும் புகழ் பெற்ற இந்திய இசையமைப்பாளர்' என்ற விருது வழங்கப்பட்டது. அப்போது பேச வந்த அனிருத்துக்கு ஆந்திர ரசிகர்கள் அற்புதமான வரவேற்பு அளித்தார்கள். அதோடு அவர் 'பைட்டிக்கொச்சி சூஸ்தே...' பாடலை சில வரிகள் பாட ஆரவாரத்துடன் அதை ரசித்தார்கள். படம் வெளிவந்தால் அனிருத் தெலுங்கிலும் ஒரு இடத்தைப் பிடித்துவிடுவார் போலிருக்கிறது.
ஆறு வருடங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியான 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் மூலம் ஒரே நாளில் பிரபலமானவர் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.