ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தாவே புயலின் பாதிப்புகளை சொல்லும் ஆவணப்படத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரித்து இயக்கியிருக்கிறார் டைரக்டர் தங்கர் பச்சான். தானே புயலின் அறுவடை என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்த படம், 35 நிமிடங்கள் ஓடுகிறது. இந்த படம் குறித்து டைரக்டர் தங்கர்பச்சான் அளித்துள்ள பேட்டியில், `கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் விழுந்து கிடப்பவை எல்லாம் வெறும் மரங்கள் அல்ல. எங்கள் தாத்தா-பாட்டி. அப்பா-அம்மா. அவர்கள் தலைச்சுமையாக கொண்டுவந்து தண்ணீர் ஊற்றி வளர்த்தவை. மரங்கள் இருந்தால்தான் உயிரினங்கள் வாழும். இதை ஒரு மாவட்ட பிரச்னையாக பார்க்கக் கூடாது. நாட்டின் பிரச்னையாக பார்க்க வேண்டும். இந்த பிரச்னையை தீர்க்க, 8 ஏக்கருக்கு ஒரு ஆழ்துளை கிணறு தோண்ட வேண்டும். இந்த இரு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் குறைந்தது 10 ஆண்டு காலம் ஆய்வு படிப்பு வரை, கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும். மக்களும், அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து முடிவெடுத்தால்தான் திட்டங்கள் வெற்றி பெறும். எனவே விவசாயிகளிடம் அரசு கருத்து கேட்க வேண்டும், என்று கூறியுள்ளார்.