பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
நடிகை ஐஸ்வர்யா ராய், நேற்று உதடு பிளவுப்பட்ட 100 குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு தனது மகள் ஆராத்யாவுடன் சென்றார். ஐஸ்வர்யா வருவதை அறிந்து அங்கு ஏராளமான புகைப்பட கலைஞர்களும், பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டனர். புகைப்பட கலைஞர்கள் ஐஸ்வர்யா மற்றும் அவரது மகளை போட்டோ எடுக்க அதிக ஆர்வம் காட்டினார். இதனால் அவர்கள் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா, அவர்களை வேண்டாம், இது படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி அல்ல, குழந்தைகள் நிகழ்ச்சி, அவர்கள் பயப்படுகிறார்கள் என்று எவ்வளவோ சொல்லி பார்த்தார். ஆனால் புகைப்படக்காரர்கள் அதை கேட்கவில்லை. இதனால் ஒருக்கட்டத்தில் இவர்களின் செயலை பார்த்து கண்கலங்கி விட்டார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.