தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி படத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. குறிப்பாக ராஜபுதன சமூகத்தினரும், சில இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். படத்துக்கு எதிராக ராஜபுதனத்து சமூகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இப்போது மீண்டும் தள்ளுபடி செய்திருக்கிறது.
பத்மாவதி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மனோகர் லால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை ஆய்வு செய்த அமர்வு படத்துக்கு தடைவிதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
நீதிபதிகளின் உத்தரவில் கூறப்பட்டிருந்ததாவது : பத்மாவதி படம் குறித்து தணிக்கை குழு முழு ஆய்வு செய்திருக்கும். அதனால் இந்த பட விவகாரம் குறித்து தணிக்கை குழு எடுத்துள்ள முடிவில் நீதிமன்றம் தலையிடாது. அதனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.