ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் குழந்தையும், அமிதாப் பச்சனின் பேத்தியுமான ஆராத்யாவின் ஆறாவது பிறந்த நாள் சில தினங்களுக்கு முன் மும்பையில் கொண்டாடப்பட்டது. ஹிந்தித் திரையுலகப் பிரபலங்களும் சில முக்கியஸ்தர்களும் விழாவில் கலந்து கொண்டார்கள். ரங்கராட்டினம், பாப்கார்ன், பஞ்சுமிட்டாய் என குழந்தைகளுக்குப் பிடித்தமான பல விஷயங்களை அதில் செய்திருந்தார்கள்.
ஷாரூக்கான் அவரது மகன் அப்ராம் உடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மகனுக்காக ரங்கராட்டினத்திலும் ஷாரூக்கான் சுற்றி வந்தார். அதன் பின் பஞ்சுமிட்டாயைப் பார்த்ததும் அப்ராம் அதை வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அமிதாப் பச்சன், ஷாரூக்கான் இருவரும் அப்ராமுக்கு பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அதை எப்படி செய்கிறார்கள் என்பதை அதிக ஆர்வத்துடன் பார்த்த அப்ராம் மகிழ்ச்சியுடன் அதை வாங்கிச் சாப்பிட்டார்.
இது பற்றிய தகவல்கள் அமிதாப்பச்சன் அவருடைய வலைத்தளத்தில் தெரிவித்து, சில புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார். “பஞ்சுமிட்டாயை வாங்கியதில் அப்ராமுக்குக் கிடைத்த மகிழ்ச்சி விலைமதிப்பற்றது. மனநிறைவான தருணம்” என அமிதாப்பச்சன் அதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
விஐபி வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் குழந்தைகள் குழந்தைகள்தானே...!