600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
சதுரங்க வேட்டை படத்தின் மூலம் கவனம் பெற்றவர் ராமச்சந்திரன் என்கிற ராம்ஸ். அதன் பிறகு வில்லனின் அடியாளாகவும், காமெடி வேடங்களிலும் நடித்து வந்தார். தற்போது அறம் படத்தில் ஆழ்துழை கிணற்றுக்குள் விழும் குழந்தையின் ஏழை தந்தையாக நடித்து புகழ் பெற்றிருக்கிறார். குணசித்ர வேட வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகிறது. கோபி நயினார் கொடுத்த வாய்ப்பு, நயன்தாரா கொடுத்த ஊக்குவிப்பால் இந்த இடத்தை அடைந்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ராம்ஸ். அவர் மேலும் கூறியதாவது:
நான் தேனி மாவட்டத்தை சேர்ந்தவன். 17 வருடங்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்தேன். முதலில் ஒளிப்பதிவு துறையில் தான் பயில வந்தேன். ஆனால் காலம் என்னை துணை இயக்குனராக ஆக்கி விட்டது. அப்படியே சில படங்களில் சின்ன சின்ன கதா பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அதில் வந்த தொடர்பின் வாயிலாக அறம் இயக்குனர் கோபி நாயனாரை சந்திக்க நேர்ந்தது. அறம் படத்தின் கதையை படிக்க சொல்லி என்னிடம் கொடுத்தார். படிக்கும் போதே நான் செய்த கதாபாத்திரம் என்னை வெகுவாக கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்தை நான் தான் செய்ய போகிறேன் என்பது அப்பொழுது கூட எனக்கு தெரியாது.
கோபி சாரின் தெளிவு, சமூக பார்வை, கடுமையான உழைப்பு ஆகியவை அறத்துக்கு உரம். ஒரு சின்ன கதாபாத்திரத்திடம் கூட படைப்பு ரீதியாக படத்துக்கு பங்களிக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர் அவர். எனக்கு இவ்வளவு பெயர் வர காரணமாக இருந்த இந்த கதாபாத்திரத்தை தந்த அவருக்கு நான் வாழ் நாள் முழுக்க கடமைபட்டு இருக்கிறேன். நயன்தாரா மேடம் மிகவும் எளிமையானவர். இவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் கூட எல்லோரிடமும் சகஜமாக பழகினார் எங்களை ஊக்குவிக்கவும் செய்தார். இயக்குனர் கோபி நயினார் தந்த வாய்ப்பு. நயன்தாரா மேடம் கொடுத்த ஊக்கம் என்னை இங்கு நிறுத்தியிருக்கிறது. என்கிறர் ராம்ஸ்