ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமல்ஹாசன் சமீபகாலமாக பரபரப்பான அரசியல் கருத்துக்களை பேஸ்புக்கில் கூறி வருகிறார். அரசியல் கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறார். நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட டுவிட்டர் கருத்தில் "குற்றவாளிகள் நாட்டை ஆளக்கூடாது" என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த மாநில அமைச்சர் ஜெயக்குமார், "கமல் தனது குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார்.
இது கமல்ஹாசனின் அண்ணனும், நடிகருமான சாருஹாசனுக்கு கடும் கோபத்தை கிளப்பி உள்ளது. அவரும் தம்பி கமலுக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளார். "கமல் ரசிகர்கள் கலகம் செய்வார்கள், நான் நீதிமன்றத்தின் மூலம் அரசை எதிர்ப்பேன்" என பரபரப்பான கருத்துக்களை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
அமைச்சர் ஜெயகுமார் தொலைக்காட்சியில் பேசியபோது, நடிகர் கமல் மீது என்ன குற்றம் சாட்டுகிறார் என்பதை விவரிக்கட்டும். இந்த அமைச்சர் லஞ்சம் வாங்கும் பழக்கம் தெரியாதவர் என்று கேள்விப்படுகிறேன். ஆனால் இந்த அமைச்சர் அம்மா வழியில் அம்மா ஆட்சி நடத்துகிறேன் என்று சொல்பவர். நானும் 60 கோடிக்கும் குறையாமல் கொள்ளையடிப்போம் என்று சொல்கிறீர்கள்? என்று கேட்க தோன்றுகிறது. அமைச்சரே.
கமல், அம்மா காலில் விழுகிறேன் என்று சொல்லவில்லை என்பது உங்கள் சிந்தனையில் தவறாக தோன்றலாம். அம்மா சொல்படி நடக்காமல் காலில் விழ ஒப்புக்கொள்ளாமல் மாநிலத்தை விட்டு வெளியேறுகிறேன் என்று சொன்ன குற்றம் தான் கமல் மீது கூறலாம். இந்த அமைச்சருக்கு நெஞ்சில் வீரமிருந்தால் உச்ச நீதிமன்றம், மாண்புபிகு அம்மா அவர்கள் தகுதிக்கு அதிகமாக அரசு ஊழியராக 60 கோடிகள் சொத்து சேர்த்தார். அதை சசிகலாவுக்கு இனாமாக கொடுத்தார் (அல்லது தாற்காலிகமாக கொடுத்து வைத்தார் என்று வைத்துக் கொள்வோம்} என்று இருவரும் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தபோது என்ன செய்தார்.
இறந்தவர்களின் தவறுகளை மறக்கலாமே ஒழிய மன்னிக்க முடியாது, என் கருத்தில் அதிமுக முக்கிய தலைவர்கள் “அம்மாவழி” என்று 60 கோடிவரை கொள்ளையடிப்போம் என்று அமைச்சர் சொல்வதாக தெரிகிறது. அமைச்சரே நீர் அம்மா வழியில் ஆட்சி செய்வோம் என்று சொல்வது அரசியல் கொள்ளையை நியாயபடுத்தும் முறையாக தெரிகிறது. மக்கள் பணத்தில் நாங்கள் கை வைத்து சொத்து சேர்க்க மாட்டோம் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள்.
கமல்ஹாசனை விட்டு விடுங்கள் ஆனால் அவர் ரசிகர்கள் கலகம் செய்யக்கூடும். சாருஹாசன் சொல்கிறேன். அம்மா வழியில் தான் ஆட்சி நடத்துவோம் என்று சொல்லும்வரை நீங்கள் வருங்கால குற்றவாளிகள் என்று தெரிகிறது. எனக்கு ரசிகர்கள் கிடையாது ஒரு கலகமும் வராது. நான் உங்கள் அரசை நீதி மன்றத்தில் மட்டும்தான் சந்திப்பேன். நீஙகள் இதுவரை லஞ்சம் வாங்கியதில்லை என்று சொல்லுங்கள் ஒப்புக்கொள்கிறேன். என் வீட்டு வாசல் கதவும் நிலையும் லஞ்சம் வாங்கியதில்லை. உங்கள் ஆட்சி தொடுக்கும் வழக்குக்களை சந்திக்க தயார்.
இவ்வாறு சாருஹாசன் தெரிவித்திருக்கிறார்.