'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
அவ்வப்போது அதிரடி கருத்துக்களை கூறி பரபரப்பு ஏற்படுத்துகிறவர் ராதிகா ஆப்தே. கபாலி படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்தவர், தமிழ் படங்களில் நடித்தபோது பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் என்று பகிரங்கமாக கூறினார்.
கவர்ச்சி படங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது சினிமாவில் ஆண்களுக்கும் பாலியல் தொல்லை இருக்கிறது என்ற கருத்தை கூறி பரபரப்பு கிளப்பி உள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
திரைப்படத்துறையில் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்படும் பெண்ணோ ஆணோ அது பற்றி வெளியில் பேசத் தயங்குகிறார்கள். 'நான் சொன்னால் யார் நம்ப போகிறார்கள்?' என்ற பயம் ஏற்படுகிறது. மேலும், எதிரே உள்ளவர் சமுதாயத்தில் மிக பெரிய ஆளாக இருந்தால், புகார் கவனிக்கப்படாமலேயே போய்விடும். கலைஞர்களின் கனவை அது சிதைத்துவிடும்.
இப்போது சினிமாவுக்கு சினிமா துறை அல்லாதவர்களும், குடும்ப பெண்களும் வருகிறார்கள். இதனால் இதுபற்றி வெளிப்படையாக பேச வேண்டும். இதைப்பற்றி பேச ஒரு தளம் முக்கியம். தங்களிடம் உள்ள அதிகாரத்தை வைத்து கொண்டு மற்றவர்களை ஆக்கிரமிப்பவர்கள் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும். அதற்கான தருணம் இது. என்கிறார் ராதிகா ஆப்தே.