600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. படத்தில் சித்தூர் ராணி பத்மாவதியை தவறாக சித்தரித்திருப்பதாக கூறி பல அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சில மதவாத அமைப்புகள் பத்மாவதியாக நடித்துள்ள தீபிகாவின் தலைக்கு பத்து கோடி பரிசு அறிவித்துள்ளன. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தீபிகாவின் தலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கமல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியிருப்பதாவது:
தீபிகாவின் தலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவரது உடலை விட தலைக்கு அதிக மரியாதை கொடுங்கள். இன்னும் சொல்லப்போனால், அவரது சுதந்திரத்துக்கு மரியாதை கொடுங்கள். அதை பறிக்காதீர்கள். எனது படங்களுக்கு பல்வேறு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எந்த விவாதத்திலும் தீவிரவாதம் என்பது வருந்தத்தக்கது. எழுந்து நில் இந்தியா. இது சிந்திக்க வேண்டிய நேரம். நாம் போதுமான அளவு சொல்லி விட்டோம். இந்தியாவே கவனி.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.